Posts

Post 14

POST 15: ஆழ்மனம் ஒரு அறிமுகம் ஆழ்மனம் மிக மிக சக்தி வாய்ந்தது அது நன்மை தரும் சக்தியாகவே இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. அது தீமையின் ஊற்றாகக் கூட இருக்கலாம். அது வரமாகலாம். சாபமுமாகலாம். அது எப்படி ? மேல்மனம் மூலமாகத் தான் ஆழ்மனம் தகவல்களைப் பெறுகிறது. அது மேல்மனம் எப்படிச் சொல்கிறதோ அப்படியே எடுத்துக் கொண்டு நினைவு வைத்துக் கொள்கிறது. நல்லது, கெட்டது, இனிமையானது, சகிக்க முடியாதது என்று எப்படியெல்லாம் மேல்மனம் அடைமொழிகளோடு செய்திகளை நினைக்கிறதோ அதே அடைமொழிகளோடு அந்த தகவல்களை சேமித்து வைத்துக் கொள்கிறது. ஆழ்மனம் மிக மிக சக்தி வாய்ந்ததாக இருப்பினும் அது தனியாக சிந்தித்தறியும் வேலையை செய்வதில்லை. ஆழ்மனம் தான் நம் பழக்க வழக்கங்கள் பதிந்திருக்கும் இடம். நம்மை உண்மையாக இயக்குவது அது தான். கவனத்தோடு சிந்தித்து செயல்படும் போது மட்டுமே நாம் மேல் மன ஆதிக்கத்தில் இருக்கிறோம். மற்ற சமயங்களில் நாம் ஆழ்மன தகவல்கள் படியே இயக்கப்படுகிறோம். உதாரணத்துக்கு ஒரு வாகனத்தை ஓட்டக் கற்றுக் கொள்ளும் போது மேல் மனம் கவனமாக இருந்து ஒவ்வொன்றையும் செய்கிற

Post 13

Post: 13 நமக்குள்ளே ஒரு மருந்தகம் இருக்கிறது பிரபஞ்ச சக்தி - Cosmic Energy... உங்களால் நோய்களை பிடித்து கொள்ள முடியாது... நீங்கள் அப்படி நினைக்காதவரை.... அப்படி நினைத்தால், உங்கள் எண்ணங்களால் அவற்றை உள்ளே அனுப்புகிறீர்கள்...... நீங்கள் சிறிது நலமற்று இருந்தாலும் அதை பற்றி பேசாதீர்கள்.. அது உங்களுக்கு இன்னும் அதிகமாக வரவேண்டுமென்றால் மட்டுமே பேசுங்கள்.... பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தெரியாமலே மனதால் பல நோய்களை கவர்ந்து இழுத்து கொள்கிறார்கள்... முடி கொட்டுதல், அதிக எடை, தைராய்டு, மூட்டு வலி, கண்பார்வை பிரச்சனைகள், மாறுபட்ட ஹார்மோன் பிரச்சனைகள், மைகிரேன், காய்ச்சல், தலைவலி, கான்சர், மற்றும் பல நோய்களை மக்கள் தங்களுக்கு தெரியாமலே மனதால் கவர்ந்து இழுத்து கொள்கிறார்கள்.. நோய்கள் எல்லாமே உங்கள் எதிர்மறை சிந்தனையால் மட்டுமே உருவாகிறது.. நமக்கு ஏற்ற தாழ்வான கண்ணோட்டம் இருப்பதையும், நம் நன்றியுணர்வுடன் இல்லாததையும் உணர்த்தவே நமது உடல்கூறு நோய்களை உருவாக்குகிறது.. உங்களுக்கு நோய் விழிப்புணர்வு தர விருப்பம் இருந்தால் ஆரோக்கியம் பற்றி மட்டும் பேசுங்கள்... நீங்கள் சிறிது நலமற்று இருந

Post 12

POST 12: 'ஒரு யோகியின் சுயசரிதை'யில் பரமஹம்ச யோகானந்தா தன் குரு யுக்தேஸ்வருடன் தனக்கேற்பட்ட அனுபவங்களை விவரித்திருக்கிறார். கல்லூரியில் படிக்கையில் ஒரு கோடை விடுமுறையில் பூரி ஆஸ்ரமத்தில் உள்ள தன் குருவை சந்திக்க யோகானந்தா செல்கையில் தங்கள் தோட்டத்தில் விளைந்த ஆறு காலி•பிளவர்களை எடுத்துச் சென்றார். அவற்றை யோகானந்தாவின் அறையிலேயே வைத்திருந்து மறுநாள் சமையலுக்குத் தர யுக்தேஸ்வர் சொல்ல அவற்றைத் தன் கட்டிலுக்கு அடியில் யோகானந்தா உள்ளே தள்ளி வைத்தார். மறுநாள் அதிகாலை யுக்தேஸ்வருடன் யோகானந்தரும் மற்ற சீடர்களும் வெளியே காற்று வாங்க நடந்தனர். சிறிது தூரம் சென்ற பின் திடீரென்று யுக்தேஸ்வர் யோகானந்தரிடம் கேட்டார். "நீ ஆஸ்ரமத்தின் பின் கதவை சரியாகப் பூட்டினாயா?" யோகானந்தர் யோசித்து விட்டு "பூட்டியதாகத் தான் நினைவு" என்றார். யுக்தேஸ்வர் சிரித்தபடி சொன்னார் "நீ சரியாகப் பூட்டவில்லை. அதன் தண்டனையாக நீ கொண்டு வந்திருந்த ஆறு காலி•ப்ளவர்களில் ஒன்றை இழக்கப் போகிறாய்". பிறகு அனைவரும் வந்த வழியே திரும்பிச் சென்றனர். ஆசிரமம் கண்ணுக்கெட்டும் தொல

Post 11

POST : 11 தங்கள் விரும்பியவற்றை மக்கள் பெறாதிருப்பதற்கான ஒரே காரணம் அவர்கள் தங்களுக்கு எது வேண்டும் என்பதை விட, எது வேண்டாம் ஏந்திபாது குறித்து அதிகமாக சிந்தித்து கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் சித்தரிக்கும் எண்ணங்களை உற்று நோக்குங்கள், கவனியுங்கள். நீங்கள் சிந்தும் வார்த்தைகளை உன்னிப்பாக கேளுங்கள். கல்லூரி மாணவர்கள் அதிகமாக பேசும் வார்த்தை ' அரியர்ஸ் வந்துட கூடாது'. இதற்கு பதிலாக 'அனைத்து பாடங்களிலும் பாஸ் செய்ய வேண்டும்' என்று சொல்லலாமே. நமது வாழ்க்கையில் பல பிரபஞ்ச விதிகள் வேலை செயகின்றன. அதில் ஒன்று. ஈர்ப்பு விதி. நீங்கள் பேசும் வார்த்தைகள், படிக்கும் விஷயங்கள், கேட்கும் விஷயங்கள் என்பதை அடிப்படையாக கொண்டு உங்களுக்கு எல்லாவற்றையும் ஈர்க்கிறது. எதை படிக்கிறீர்கள், பார்க்கிறீர்கள், பேசுகிறீர்கள் அதை அப்படியே உங்களுக்கு வரவழைத்து கொடுக்கிறது.

Post 10

POST 10 : 20 நீங்கள் வெகு நாட்களாக பார்க்காத, சந்திக்காத நண்பர் ஒருவரை நினைவில் கொள்ளுங்கள். அவர் உருவத்தை கற்பனை செய்து பாருங்கள். அவரை எப்படியும் சந்திப்பேன் என் அடிக்கடி உங்களுக்குள் சொல்லி வாருங்கள். என்ன நடக்கிறது என்று பாருங்கள். எப்படியோ யாரவது ஒருவர் அந்த நண்பனை பற்றி பேச ஆரம்பிப்பார்கள். அவருடைய தொடர்பு கிடைப்பதற்கு எல்லா அறிகுறிகளும் தென்படும். ஏன், அந்த நண்பரே கூட தொலைபேசியில் அழைக்கலாம். திடீரென உங்களைக்கூட நேரில் சந்திக்கலாம். இது எப்படி சாத்தியம் ? ஆழ்மனதினில் மீண்டும் மீண்டும் போடப்படும் விஷயம் ஒரு விதை ஆகிறது. அந்த எண்ணத்தின் அதிர்வலை அந்த நண்பரை உங்களிடத்தில் கொண்டு வந்து சேர்க்கும். இது ஒரே நாளில் நடப்பதற்கு சாத்தியக்கூறு குறைவு. நான் வெற்றி கண்ட ஒரு கவுன்செலிங் வெவ்வேறு ஜாதி பிரிவினர் இருவர் காதலித்து வந்தனர். பெண் உயர் ஜாதி. பெண் வீட்டில் பையன் நன்கு பரிச்சயம் ஆகிறான். பெண் வீட்டில் காதல் திருமணத்திற்கு தயார் ஆகி விடுகிறார்கள். பையன் வீட்டில் தந்தை ஏற்றுக்கொள்ளவே இ

Post 9

POST 9 : 1956ல் கனடாவில் டொரண்டோவைச் சேர்ந்த டாக்டர் ஹெரால்டு ரோசன் என்ற மனோதத்துவ மருத்துவர் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த ஒரு நபரை ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்த்த அந்த நபர் எழுந்து உட்கார்ந்து எதையோ எழுத ஆரம்பித்தார். அவர் ஒரு பாரா எழுதி விட்டு ஓய்ந்து பின் சுயநினைவுக்கு வந்தார். அதைப் படிக்க முயன்ற டாக்டருக்கு ஒன்றும் புரியவில்லை. அது என்ன மொழி என்றே தெரியவில்லை. அதை எழுதிய நோயாளிக்கும் அது பற்றி ஒன்றும் தெரியாமல் போகவே அந்த டாக்டர் அது எதாவது மொழியா இல்லை அர்த்தமில்லாத வரை எழுத்துகளா என்று கண்டு பிடிக்க மொழி ஆராய்ச்சியாளர்களிடம் அந்தத் தாளை அனுப்பினார். அவர்களிடமிருந்து கிடைத்த பதில் அந்த டாக்டரை இன்னும் அதிகமாகக் குழப்பியது. அந்த மொழி ஆராய்ச்சியாளர்கள் அது மேற்கு இத்தாலியில் கிமு ஒன்றாம் நூற்றாண்டு வரை பேசப்பட்ட ஆஸ்கன் என்ற மொழி என்றும் அதன் எழுத்து வடிவிற்கான ஒரு ஆதாரம் கிமு ஐந்தாம் நூற்றாண்டில் ஒரு பிணத்துடன் சேர்ந்து புதைக்கப்பட்ட ஈயத் தகடில் கிடைத்திருக்கிறது என்றும் கூறினார்கள். அது ஏதோ மந்திரிக்கப்பட்ட சாபம் என்று பின்னர் ஆராய்ச்சியில் தெரிந்ததாகவும் அந்த சாபத்தைத் தான் ஆஸ்கன் மொழ

Post 8

POST 8 நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நீங்கள் கேட்கும் ஒவ்வொரு சொல்லும் உங்கள் நீங்கள் படிக்கும் ஒவ்வொரு விஷயமும் உங்கள் ஆழ் மனதை பாதிக்கும். அது நேர்மறையாகவா அல்லது எதிர் மறையாகவா என்பது அந்த விஷயத்தை பொறுத்தது. நீங்கள் தொடர்ந்து வெற்றி கதைகள் படித்து வந்தால் அந்த vibration வேலை செய்ய ஆரம்பித்து விடும். தொடர்ந்து தோல்வி விஷயங்களை கேள்விப்பட்டு வந்தால் அந்த நெகடிவ் vibration வேலை செய்ய ஆர்மபித்து விடும். உங்கள் வாழக்கையை நீங்கள் தான் தெரிந்தோ தெரியாமலோ தேர்வு செயகிறீர்கள். Consciously or unconsciously . இனிமேல் நாமே தேர்வு செயது ஆழ்மனதின் ப்ரோக்ராம் மாற்றலாம். நமது ஆழ்மனம் ஒரு எப் எம் ஸ்டேஷன் போன்றது. நமது மனதினில் உதிக்கும் ஒவ்வொரு எண்ணத்திற்கும் ஒரு frequency இருக்கிறது. அதே frequency உள்ள விஷயத்தை அல்லது நபரை அது ஈர்க்கிறது. சூழ்நிலைகளையும் உருவாக்குகிறது. உதாரணமாக, நீங்கள் சாலையில் செல்லும் போது ஒரு நபர்